கொழும்பு தாமரைக் கோபுரமும் தமிழும்

இலங்கையில் தமிழ் மொழியை மிக மோசமாக எழுதும் பழக்கம் அரசு மட்டத்தில் நெடுநாளகத் தொடர்கிறது. தமிழுக்கு தேசிய மொழிச் சிறப்பு, அரச கரும மொழி, மொழிக்கான அமைச்சரவை என வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், அம்மொழியை மிக மோசமான எழுதும்  பழக்கம் இன்னும் மறையவில்லை. 

இதன் உச்சகட்டம் கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்திலும் தொடர்கிறது. கொழும்பு தாமரைக் கோபுரம் வெளிநாட்டவர்களினதும் உள்நாட்டவர்களினும் கவனத்தை ஈர்க்கும் இடம். கொழுப்பில் உள்ள மிக முக்கிய கட்டங்களில் ஒன்று. தென் ஆசியாவிலும் உலகிலும் உயரமான கட்டடம் என்ற வகையில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அவ்வாறாதனதொரு முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழை சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். 

kolumbu thamaraik kopuram
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

இங்குள்ள தமிழ், தமிழ்பேசும் அரசியல்வாதிகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஊடகங்களும் கண்டுகொண்டனவா என்று தெரியவில்லை. ஆனால் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழ் பிழைகளுடன் உள்ளது. பாடசாலை மாணவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கொண்டு சென்றால், தயவுசெய்வு அவர்கள் இதுபோன்ற பிழைகளை கற்காது காத்துத்கொள்ளுங்கள். 

ஒற்றுப்பிழை, சந்திப்பிழை என்பதற்கப்பால் இங்குள்ள பிழைகளும் அவை எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்ற முறையும் இங்கு தரப்பட்டுள்ளது. 

பிழை

சரி

கருத்துருலின் பிரகாரம்

கருத்துருவின் பிரகாரம்

மணிக்குவரும்

மணி

சுபவேனையில்

சுபவேளையில்

20 ஆந்

20 ஆம்

இங்குள்ள படம் பொது உரிமத்தின் கீழ் பதிவேற்றப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியா உள்ளிட்ட இடங்களில் பதிவேற்றி இலங்கை அரசின் தமிழ் மொழி மீதான காழ்ப்புணர்வை உலகறியச் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்!

புறம் பேசுதல்

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்சினைகள் மறைந்து விடும் என்பார்கள்.

புறம் பேசுதல் (gossip). ஒரு போதையாக மாறிவிட்ட காலம் இது. 

போதைப் பழக்கம், போதைக்கு அடிமையாகி இருப்பவரை மட்டுமின்றி அவரைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிப்பதைப் போல, புறம் பேசுதலும் பேசுபவரை மட்டுமில்லாமல் அவரைச் சுற்றி இருப்போரையும் பாதிக்கிறது.

உலக அளவில் 60 சதவீதம் மக்கள் ஒருவரைப் பற்றி மற்றவர் ஏதேனும் பேசுகிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று.

மனரீதியாக தன்னம்பிக்கை இல்லாதவர்களும் பிறருடைய கவனத்தை தாங்கள் கவர வேண்டும் என நினைப்பவர்களுமே பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவார்கள். 

புறம் பேசுவதற்கு பல காரணிகள் இருந்தும்,இரண்டு  காரணங்கள் மிக முக்கியமானவை.

1. பொறாமை

நொடிப் பொழுதில் நிகழ்ந்துவிடும் தன்மைகொண்டது பொறாமை. தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருக்கும்போது, அவர்மீது பொறாமை ஏற்படுகிறது. அவரிடத்தில் இருக்கும் அந்த ஒன்றோ அதைபோல் வேறு ஒன்றோ கிடைத்தால் அன்றி, பொறாமை போகாது. அல்லது அவர்களிடத்தில் அதைப் பற்றிய மதிப்பு குறைய வேண்டும்.

2. முக்கியத்துவ உணர்வு இழக்கப்படல்

நாம் இருக்கும் இடத்தில் எப்போதுமே ஓர் முக்கியத்துவ உணர்வைப் பெற விரும்புகிறோம். நண்பர்கள் மத்தியில், சுற்றி இருப்பவர்கள் மத்தியில், 'சிறந்தவர்' என்ற உணர்வைப் பெற விரும்புகிறோம். இந்த உணர்வை எல்லா இடத்திலும் நாம் எதிர்பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் மட்டுமே எதிர்பார்கிறோம். தெரிந்த வட்டத்தில் சிறந்தவராக விளங்க வேண்டும் என்ற உணர்வு. அவ்வாறான முக்கியத்துவம் இழக்கப்படும் போது மற்றவர்கள் தொடர்பில் புறம் பேசத் தொடங்குகின்றார்கள்.

புறம் பேசப்படுபவர்களை மட்டுமல்ல பேசுபவர்களையும் கேட்பவர்களையுமே அது மனரீதியாகப் பாதிக்கும். உண்மையில் புறம் பேசு பவர்கள் தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்ளவே செய்கிறார்கள். இவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல என்ற எண்ணத் தைத்தான் பிறர் மனதில் விதைக்கிறார்கள். 

நீங்கள் ஒருவரைப் பற்றி என்ன பேசுகிறீர்களோ அது முதலில் நீங்கள் யார் என்பதையே பிரதிபலிக்கும். தவிர அது அவருக்கு என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அந்த விளைவு உங்களிடம் இருந்தே ஆரம்பம் ஆகும். 

மற்றவர்களை மகிழ்ச்சி படுத்துவது அவர்களுக்கு தரும் மறுமலர்ச்சி அல்ல அது உங்களுக்கே மகிழ்ச்சிதரக் கூடியது. இதைப் புரிந்து கொண்டால் மகிழ்ச்சி மனதில் நிறையும்.

போலி வேடம்

எலி சிலையாய் இருந்தால் பூஜை செய்கிறோம்.

உயிரோடு இருந்தால் சாக அடிக்கிறோம்.


பாம்பு சிலையாக இருந்தால் பாலை ஊற்றுகிறோம்.

உயிரோடு இருந்தால் அடித்து சாகடிக்கிறோம்.


தாய், தந்தை போட்டோவில் இருந்தால் மாலை போட்டு வணங்குகிறோம்.

உயிரோடு இருந்தால் அனாதை இல்லத்தில் விட்டு விடுகிறோம்.


இறந்து போனவனுக்கு தோள் கொடுக்கிறோம்.

உயிரோடு இருப்பவனுக்கு கை கொடுத்து உதவமாட்டோம்.


கல்லிலே தெய்வத்தன்மை இருக்கின்றது என்று கண்டு பிடித்த நமக்கு,

மனிதனில் மனிதத்தன்மை இருக்கிறதென்று என்பதை கண்டு பிடிக்காமல் போகிறோம்.


உயிரில்லாதவற்றின் மேல் பக்தி எதற்கு?

உயிரோடு இருந்தால் வெறுப்பு எதற்கு?


போலி வேடம் போடாமல், நஸ்தீகன் என கவனத்தை தீருப்பாமல், சுய பரிசோதனை செய்வோமா?

வறியவர்களின் பசியைப் போக்குங்கள்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு மிகவும் பசித்தது. எதையாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா, குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கோப்பை பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான் “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா? அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“மிக்க நன்றி” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு, முட்டி மோதி, படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து, அந்த நகரிலேயே மிகப் பெரிய மருத்துவர் ஆனான். அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த மருத்துவரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மருத்துவ அறிக்கையில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக மருத்துவ அறைக்குப் போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம்தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல இலட்சங்கள் செவவாயின. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பற்றுச்சீட்டை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பற்றுச்சீட்டைடின் கடைசியில் கையால் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருந்தது.

“இந்த பற்றுச்சீட்டை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கோப்பை பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய கோவாட் கெலிதான் (1858-1943).

இங்கே ஒரு குறள் நினைவுக்கு வருகிறது.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள்: வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அதுதான் செல்வம் பெற்ற ஒருவன் பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும். 


குழப்பம் மிகுந்த இலங்கை ஆட்சி

எப்போதுமே குழப்பம் மிகுந்த ஆட்சியையே இலங்கை கொண்டிருந்துவருகின்றது. முக்கிய உதாரணம் இங்கேயுள்ளது.

பண்டைய இலங்கையை ஆண்ட மன்னர்கள் சுமார் 194 பேர். இதில் 19 பேர் தமிழ் மன்னர்கள். சிங்கள மன்னர்கள் 175 பேர்.

அந்த சிங்கள மன்னர்கள் 175 பே ரும் ஆட்சிக்கு வந்தவிதம் இப்படியானது.

  • 60 யுவராஜாக்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 53 சகோதரர்கள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 30 படைத்தளபதிகள் மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 5 தனயன்கள்  மன்னரை கொன்று மன்னரானவர்கள்
  • 1 இராணி மன்னரை கொன்று மகாராணியானாள்
  • 1 வாயில் காப்போன் மன்னரை கொன்று மன்னரானான்

25 பேர் மட்டுமே தெரிவு செய்யப்பட்ட மன்னர்கள்.


சிறு வினோத தகவல்கள்

ஏழாண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் நட்பு வாழ்நாள் முழுதும் நீடிக்குமாம். 

அடிக்கடி ஒருவர் நினைவு வந்து கொண்டிருந்தால், அவரும் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறாராம். 

எல்லாவற்றுக்கும் எரிச்சல் படுகிறீர்கள் என்றால், எதையோ இழந்த நிலையில் இருக்கிறீர்களாம்.

குழுவாக அமர்ந்திருக்கையில் யாராவது நகைச்சுவை சொன்னால், சிரித்துக்கொண்டே யாரைப் பார்க்கிறீர்களோ, அவர்தான் உங்களுக்கு மிகவும் பிடித்தவராவர். 

நாளொன்றுக்கு நான்கைந்து பாடல்களையாவது கேட்பவர்களுக்கு நினைவாற்றல் கூடுமாம், நோய் எதிர்ப்பு சக்தி வளருமாம், மன அழுத்தத்துக்கான வாய்ப்பு 80 சதவீதம் குறையுமாம். 

உங்கள் மனதை யாராவது காயப்படுத்திருந்தால், அவரை மன்னிப்பதற்கு உங்கள் மூளை சராசரியாக 6 முதல் 8 மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளுமாம். 

சர்ச்சைக்குரிய விடயங்களில் கருத்து சொல்லாமல் விடுபவர்கள்,  புத்திசாலிகளாம்.

மிக விரைவில் ஏமாற்றத்தை சந்திப்பவர்கள், யாரையுமே நம்பாதவர்கள்தானாம். 

முன்னாள் காதலர்கள் இருவர் நண்பர்களாக மட்டுமே இருந்தால் - ஒன்று, அவர்களுக்குள் காதல் இருக்கிறது. இல்லையேல், அவர்கள் ஒருபோதும் காதலிக்கவே இல்லை.

யார் அதிகம் உபதேசம் செய்கிறார்களோ, அவர்கள்தான் அதிகமான பிரச்சினைகளில் இருக்கிறார்களாம். 

ஒருவர் ஒரு விசயத்தை செய்யவில்லை என்று அதிக முறைக்கூறி விவாதிப்பவரானால், அதை அவர் செய்திருக்கலாம் என்று உளவியல் கூறுகிறது.

ஒருவர் அதிகமாக விரல் நகம் கடிப்பவராக இருந்தால் அவர் பதற்ற நிலையில் உள்ளவராவார் என்று அர்த்தம். 

ஒருவருக்கு கோபம் அதிகமாக வருமானால் அவர் பதற்றமாக இருக்கிறார் என கருதமுடியும். 

ஒருவர் அதிகாலையில் எழும்புபவராக இருந்தால் அவருக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கியமான விசயங்களும், வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய விசயங்களும் காத்திருக்கும். 

ஒருவர் பகலில் உறங்கி இரவில் விழித்திருப்பவராக இருந்தால் இவ்வாரானவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.  

ஒரு மனிதன் ஆகக்குறைந்தது 6 மணித்தியாளங்கள் ஆழ்நிலையில் உறங்க வேண்டும் (எந்த ஒரு ஓசைக்கும் எழும்பாத ஆழ்நிலை தூக்கம்). இவ்வாறு தூங்குபவரானால் இவருடைய பல்வேறுப்பட்ட உடல், உளவியல் சார்ந்த நோய்கள் வராது. 

ஒருவர் அதிகமாக  மறையாக (முடியாது / கிடைக்காது / இயலாது) பேசுபவராக இருந்தால் அவர் வாழ்க்கையில் பல்வேறுபட்ட ஆசைகள் நிறைவேறாமல் வாழ்ந்து இருப்பார். 

இரட்டை வேடம் போடும் கிறிஸ்தவ எதிர்பாளர்கள்

இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன. அதில் 230 மொழிகளுக்கு மட்டுமே எழுத்துகள் உள்ளன. இந்த நாட்டில் இந்தி மொழி இருக்கவில்லை இந்துஸ்தானி, பெர்சியன், உருது, அரபி, சமஸ்கிருதம் போன்ற பல மொழிகள் இருந்தன. ஆனால் இந்த மொழிகளை பிரபலப்படுத்த உள் நாட்டவருக்கோ,வெளி நாட்டவர்க்கோ பெரிய விருப்பம் இருக்கவில்லை 

இங்கிருந்த மொழிகள் நீச மொழிகள் என்பதால் அவைகளை பிரபலப்படுத்த சமஸ்கிருத மொழி பின்புலத்தில் உள்ளவர்கள் விரும்பவில்லை. இந்தியும் அதுபோலவே இருந்தது.

இரட்டை வேடம் போடும் கிறிஸ்தவ எதிர்பாளர்கள்

1880 களில் ஒரு கிறிஸ்தவ சமயப்பரப்பாளர் கலாநிதி சாமுவேல் கென்றி கெல்லொக் 12 மத்திய இந்திய உள்ளூர் மொழிகளுக்கு எழுத்துக்களை உருவாகி  இந்தி மொழியில் இலக்கணம் எழுதினார்.

இவர் எழுதிய முதல் இலக்கண புத்தகம்தான் இந்தி மொழிக்கான முதல் இலக்கணமாக இன்றைக்கும் பல்கலைக்கழகங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது.

கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் அதன் பிறகு இந்தி மொழியில் புத்தகங்களை அச்சடித்து, பத்திரிக்கைகளை வெளியிட்டு, பள்ளிகளை, கல்லூரிகளை, பல்கலைக்கழகங்களை  உருவாக்கி இந்தி மொழி பயிற்றுவித்தனர். 

இன்றைக்கு மந்திரிகளாக, சட்ட மன்ற உறுப்பினர்களாக இந்த நாட்டை ஆளுகிறவர்களாக மாறி உள்ளனர். ஆனால் இப்பொழுது சொல்லுகின்றனர் கிறிஸ்தவ சமயப்பரப்பாளர்கள் இந்த நாட்டுக்கு (இந்தியா) தீமை செய்துவிட்டனர் என்று.

கிறிஸ்தவம் வித்திட்ட பல திட்டங்களில் இருந்து கொண்டு கிறிஸ்தவ எதிர்ப்பிரச்சாரம் செய்பவர்கள் கிறிஸ்தவம் உருவாக்கிய திட்டங்கள் (சட்டம் உட்பட) மாற்ற முன்வருவார்களா?

மேலத்தேய கலாச்சாரத்தை நகைப்புக்குளாக்குபவர்கள் அணித்திருக்கும் மேலத்தேய உடையகளை களைந்துவிட்டு, தங்கள் சுயாதீன உடைக்குத்திரும்புவார்களா? தங்கள் சமூகத்திற்கும் அதை வலியுறுத்துவார்களா?