கொழும்பு தாமரைக் கோபுரமும் தமிழும்

இலங்கையில் தமிழ் மொழியை மிக மோசமாக எழுதும் பழக்கம் அரசு மட்டத்தில் நெடுநாளகத் தொடர்கிறது. தமிழுக்கு தேசிய மொழிச் சிறப்பு, அரச கரும மொழி, மொழிக்கான அமைச்சரவை என வெளிப்படையாகக் காட்டிக் கொண்டாலும், அம்மொழியை மிக மோசமான எழுதும்  பழக்கம் இன்னும் மறையவில்லை. 

இதன் உச்சகட்டம் கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்திலும் தொடர்கிறது. கொழும்பு தாமரைக் கோபுரம் வெளிநாட்டவர்களினதும் உள்நாட்டவர்களினும் கவனத்தை ஈர்க்கும் இடம். கொழுப்பில் உள்ள மிக முக்கிய கட்டங்களில் ஒன்று. தென் ஆசியாவிலும் உலகிலும் உயரமான கட்டடம் என்ற வகையில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அவ்வாறாதனதொரு முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழை சிறுபிள்ளைத்தனமாக எழுதியுள்ளனர். 

kolumbu thamaraik kopuram
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.

இங்குள்ள தமிழ், தமிழ்பேசும் அரசியல்வாதிகளும் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஊடகங்களும் கண்டுகொண்டனவா என்று தெரியவில்லை. ஆனால் இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் உள்ள இடத்தில் தமிழ் பிழைகளுடன் உள்ளது. பாடசாலை மாணவர்களை இதுபோன்ற இடங்களுக்கு கொண்டு சென்றால், தயவுசெய்வு அவர்கள் இதுபோன்ற பிழைகளை கற்காது காத்துத்கொள்ளுங்கள். 

ஒற்றுப்பிழை, சந்திப்பிழை என்பதற்கப்பால் இங்குள்ள பிழைகளும் அவை எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்ற முறையும் இங்கு தரப்பட்டுள்ளது. 

பிழை

சரி

கருத்துருலின் பிரகாரம்

கருத்துருவின் பிரகாரம்

மணிக்குவரும்

மணி

சுபவேனையில்

சுபவேளையில்

20 ஆந்

20 ஆம்

இங்குள்ள படம் பொது உரிமத்தின் கீழ் பதிவேற்றப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் தாராளமாக பயன்படுத்தலாம். விக்கிப்பீடியா உள்ளிட்ட இடங்களில் பதிவேற்றி இலங்கை அரசின் தமிழ் மொழி மீதான காழ்ப்புணர்வை உலகறியச் செய்யுங்கள்.

வாழ்க தமிழ்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.