ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.

ஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்

ஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.

ஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்களின் ஒழுக்கமான வாழ்க்கை முறையும் தழும்பவில்லை.


அத்தோடு ஜப்பானியர்களின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் நின்றுவிடவில்லை. விளையாட்டரங்கில் போட்டியைக் காண வந்த ஜப்பானிய இரசிகர்கள் போட்டி முடிந்த பின்னர் அங்கு கைவிடப்பட்டிருந்த குப்பைகளைச் சேகரித்து விளையாட்டரங்கை சுத்தப்படுத்தியதைக் காண முடிந்தது. ஏன் நமக்கு இந்த வீண் வேலை என்று செல்லும் இன்றைய உலகில், தோல்வியின் பின்னரும் ஒழுக்கம், கடமையுணர்ச்சி ஆகியவற்றைக் கைவிடாத ஜப்பானியர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும், குழு நிலை ஆட்டத்தில் ஜப்பானுக்கும் செனகல் நாட்டிற்கும் ஒரே அளவான புள்ளிகள்தான் இருந்தன. ஆனால் ஜப்பான் அடுத்த சுற்றிற்குத் தெரிவாகக் காரணம் அவர்கள் அதிகம் முறை தவறிய ஆட்டம் (foul) ஆடியிருக்கவில்லை. செனகல் அதிகமாக முறை தவறிய ஆடியதால் அடுத்த சுற்றிற்குச் செல்ல முடியாமல் தோற்றுவிட்டது.

ஜப்பானியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள பலவிடயங்கள் உள்ளன. அதில் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும்கூட உள்ளடங்குகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.