வாழ்க்கைத் தத்துவம்

மனித வாழ்க்கை விடை காண முடியாத பல கேள்வி முடிச்சுக்களைக் கொண்டது. அதனால்தான் என்னவோ வாழ்க்கைத் தத்துவம் நமக்கு அடிக்கடி தேவைப்படுகிறது. சிலபேரைப் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் வாழ்க்கை மிகவும் இலகுவாகச் செல்லும். அவர்கள் அதிகம் கல்வி கற்றிருக்க மாட்டார்கள். அதிக பணம் கிடைக்கும் வேலை இல்லை. ஒரு சாதாரண நபராகவே வாழ்வார். சிலவேளைகளில் அவர்களின் வாழ்க்கை நமக்குப் பிடித்திருக்கும். இந்த அலைச்சலான வாழ்க்கையைவிட, அந்த இலகுவான வாழ்கையை நாம் விரும்பலாம்.

வாழ்க்கைத் தத்துவம்
வாழ்க்கைத் தத்துவம்

இந்தப் படத்தைப் பாருங்கள். கோணலாகிப் போன ஆணிகள் விடப்பட்டு நேரான ஆணி மட்டுமே அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் பயனுள்ளவரானால் கட்டாயம் உலகம் உங்களை உபயோகப்படுத்தும். ஆகவே, உங்களுக்கு சுமையும் அழுத்தங்களும் அதிகரிக்கும். உபயோகம் இல்லை என்றால் காசிகூட காட்சிப் பொருள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காய் உள்ள மரத்திற்குத்தானே கல்லடிபடும்.

இன்னுமொரு கோணத்தில் இதைப் பார்த்தால், நேரான நபர்தான் இன்றைய உலகிற்குத் தேவை. உங்களைத்தான் இந்த உலகம் தேடிக் கொண்டிருக்கிறது. ஆகவே, சுத்தியல் அடிபோல் வலிகள் உங்கள் மேல் இறங்கத்தான் செய்யும். உங்கள் நேர்மைதான் உங்களை வாழ வைக்கிறது. கோணலான மனிதர்கள் தங்களுக்கு சுமை இல்லையே என மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால், ஒரு பெட்டியை உருவாக்கவோ அல்லது வேறு ஏதாவது முக்கிய பொருளை உருவாக்கவோ நேரன ஆணி போன்ற நபர் கட்டாயம் தேவை. இதுதான் வாழ்க்கைத் தத்துவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.