பெரியார்

பெரியார் வாழ்க்கையின் கடைசி நாட்களில் ஆற்றிய செயல்கள் நமக்கு உணர்த்துபவை என்ன?

பெரியார்

90 வது வயதில் 180 கூட்டம்.

91 வது வயதில் 150 கூட்டம்.

93 வது வயதில்  249 கூட்டம்.

94 வது வயதில் 229 கூட்டம்.

வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் 

(95 வது வயதில்)  42 கூட்டம்.

இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்தான் இடம்பெற்றன. 

குடலிறக்க பிரச்னையினால் சரிந்து விழும் குடலைப் இடுப்புப்பட்டி வைத்துக் கட்டிக் கொண்டு கூட்டங்களில் பேசச் சென்றார்.

சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப் போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் எந்த ஆட்சியைப் பிடிக்கச் செய்தார்?

எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்கச் செய்தார் ? 

அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா? 

மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ? 

நான் சொல்வதைக் கேட்டால் தான் உனக்கு சொர்கம்.

என்னை வணங்கா விட்டால் நரகம்  என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...

நான் தலைவன். நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டுக் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்...

யார் சொன்னாலும், நானே சொன்னாலும் உன் அறிவைக் கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக் கொண்டு ஆராய்ந்து உன் அறிவு ஏற்றுக் கொண்டால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் விட்டுவிடு என்று சொன்ன ஒரே தலைவர் இவர் மட்டுமே.

பெரியார் இல்லை என்றால் இன்று தமிழ் உலகின் பகுத்தறிவு பக்கங்கள் சில கிடைத்திருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.