மனநிலை மாற்றம்

நம்முடைய சொந்த உளக்காட்சியினைக் கொண்டே நாம் மிக அதிகமாக விடயங்களைப் பார்க்கின்றோம். நம்முடைய எண்ணங்கள் குறிப்பிட்ட விடயங்களில் பொறிக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான நிலையில் இருந்தால், நம் மனநிலை மாற்றப்பட வேண்டியது அவசியம். மனநிலை என்பது ஒருவருடைய நடத்தையையும் மனோபாவத்தையும் முடிவுசெய்யும் நம்பிக்கைகள் அல்லது சிந்திக்கும் வழி ஆகும். நாம் எப்படி விடயங்களைப் பார்க்கின்றோமோ அப்படியே நம் குணவியல்பும் அமையும். அவ்வாறே நம் சிந்தனையும் நம்பிக்கையும் நம் நடத்தையைத் தீர்மானிக்கும்.

மனநிலை மாற்றம்

முன்னேற்ற உருவாக்கத்தில் ஒரு பெரும் காரணியாக மனநிலையை அகற்றுதல் காணப்படுகிறது. உங்கள் நடத்தையிலும் மனோநிலையிலும் ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை எடுத்தலும், அதற்கு மாறான மனநிலையை அகற்றலும் முக்கியமானது. நம் எல்லோரிடமும் சில பிழையான குணவியல்புகள் உள்ளன. அவற்றை நாம் கண்டுபிடித்து, நேரான மனநிலைக்கு மாற்றப் போராட வேண்டும்.

மனநிலை பற்றிய ஒரு ஆப்பிரிக்க கதை உள்ளது. பாதணி விற்கும் நிறுவனம் ஒன்று தன் இரு விற்பனை முகவர்களை ஆப்பிரிக்காவிற்கு அனுப்பியது. முதலாவது நபர் "இங்கு யாரும் பாதணி அணிவதில்லை" என தன் கடிதத்தில் குறிப்பிட்டு, தன் வேலையை ராஜினாமா செய்தார். இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என தன்னுடைய மகிழ்ச்சியையும், வியாபாரத்திற்கு இடமுள்ளதையும் குறிப்பிட்டு தன் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பினார். இங்குள்ள வேறுபாடு என்னவெனில் இரண்டாவது நபர் "இங்கு எல்லோருக்கும் பாதணி வேண்டும்" என்ற நேர் மனநிலையைக் கொண்டிருந்தார். இதுதான் வேறுபாடு! நேர் மனநிலை நம்பிக்கையைக் கொண்டுவரும். ஒருவர் சாத்தியமற்ற சூழ்நிலையைக் காண, மற்றவர் முடிவற்ற சாத்தியப்பாட்டைக் கண்டார்.

தெளிவாக குறிப்பிடக்கூடியது என்னவென்றால், நம்முடைய மனநிலை நம்முடைய மனோபாவத்திலும், மிகவும் முக்கியமாக நம்முடைய நடத்தையையிலும் தாக்கம் செலுத்தும். நம் சிறப்பிற்காக நடத்தையிலும் முன்னேற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தடைசெய்யும் பிழையான மனநிலையை விலக்குவதும், ஒரு நேர் தாக்கத்தை உருவாக்கக்கூடிய புதிய மனநிலையை பற்றிக் கொள்வதும் மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.