படித்ததில் மிகவும் பிடித்தது. யாருடைய ஆக்கம் என்று தெரியாது. ஆனால், சொற்கள் கவிதையாகப் பேசுகின்றன.
~~ 1 ~~
நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும்உள்ள வித்தியாசம் என்ன?
குழந்தை நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்பது நம்பிக்கை.
படித்து முன்னறிய குழந்தை தன்னைக் காப்பாற்றுவான் என்பது மூட நம்பிக்கை!
~~ 2 ~~
ஓவ்வொரு இளைஞனின் மன உளைச்சலுக்கும் காரணம்?
மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!
~~ 3 ~~
வசதி இல்லாதவன் ஆடு மேய்க்கிறான்!
வசதி உள்ளவன் நாய் மேய்க்கிறான்!
~~ 4 ~~
ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் விடயங்கள் இரண்டு?
ஒன்று பிகர், மற்றொன்று சுகர்!
~~ 5 ~~
என்னதான் சென்டிமென்ட் பார்த்தாலும், கப்பல் கிளம்பும்போது பூசணிக்காய் எலுமிச்சம் பழம் வச்சு நசுக்கினாலும் சங்கு ஊதிட்டுதான் கிளம்பும்.
~~ 6 ~~
கணிப்பொறிக்கும் எலிப்பொறிக்கும் என்ன வித்தியாசம்?
கணிப்பொறியில் எலி வெளியே இருக்கும். எலிப்பொறியில் எலி உள்ளே இருக்கும்.
~~ 7 ~~
டாக்டருக்கும் ஆக்டருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
இரண்டு பேரும் தியேட்டருக்கு வரவழைச்சு தான் கொல்லுவாங்க!
~~ 8 ~~
சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசில காச கரியாக்குவாங்க.
நெய்வேலிலே கரிய காசாக்குவாங்க!
~~ 9 ~~
FILE இக்கும் PILE இக்கும் என்ன வித்தியாசம்?
FILE இல் உட்கார்ந்து பார்க்கணும். PILE இக்கு பார்த்து உட்காரணும்.
~~ 10 ~~
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லேன்னா balance பண்ண முடியாது.
செல்போன்ல balance இல்லேன்னா call பண்ண முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.