நடிகர்கள் என்போர் யார்?

நடிகர்கள் என்பவர் யார் என்பது  பற்றி அன்று எம். ஆர். இராதா சொல்லியது இன்றும் பொருத்தமானது.

Koothaadi


"என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு? ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக. ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!

ஜனங்க ஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான். கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்க போவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி, கம்பு இருந்தா போடுங்க தாயின்னு பிச்சை எடுப்பான். அது தான் அவனுக்குச் சாப்பாடு. இராத்திரியில், உழைச்ச மக்கள் எல்லாம் வீடு திரும்பி, சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூத்து பார்க்க வருவான். அப்போதான் கூத்தாடி வேலையே ஆரம்பிக்கும்! உழைச்ச மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்குற கூத்தாடி பரம்பரை தான் நாங்கெல்லாம். அதனால அந்த கூத்தாடி பசங்கள பெருசா நினைச்சி அவனுகள மதிச்சி நாட்டை கொடுக்காதீங்க. நாசமாக்கிருவானுக!

அவனுகளுக்கு கூத்த தவிர ஒண்ணும் தெரியாது! ஒழுங்கா படிப்போ வேலையோ தொழிலோ இருந்தால் அவன் ஏன் கூத்தாட வாரான்?

ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாத பய தான் அங்க வருவான். அடி மட்ட வரிசை அது. அவனை விட கீழான மடையன் ஒரு பயலுமில்ல, தெரிஞ்சிக்க!

அன்னைக்கு நாங்க வீடு வீடா போனோம். அரிசி கம்புகேழ்வரகுன்னு கொடுத்தாங்க. பசியாறினோம்!

இன்னைக்கு விஞ்ஞானம் உங்கள எங்கள் கொட்டாயி தேடி வந்து காசு கொடுக்க சொல்லுது அவ்வளவு தான்.

மற்றபடி நாங்க அன்னைக்கும் கூத்தாடி, இன்னைக்கும் கூத்தாடி, என்னைக்கும் கூத்தாடி.

இது புரியாம நடிகன் மன்றம், தலைவன், மயிருன்னு கிளம்பாத! அசிங்கம் அவமானம்!கூத்துக்கு அரிசி சோளம் கொடுத்த மாதிரி காசு எறிஞ்சுட்டு போயிட்டே இரு. 

தலைவன அங்க தேடாத! அது முட்டாள்தனம். அவன ஒரு ஆளுண்ணே நினைக்காத. காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் நடிப்பான் அயோக்கிய பயலுங்க!”

என்ன சொல்கிறீர்கள்? உங்களை யாரென்று தெரியாதவனை உங்கள் தலைக்குமேல் வைக்க முயல வேண்டாம். தலைவன், தல, தளபதி இதுபோன்ற எந்த பட்டப்பெயருக்கும் இலாயக்கற்ற வெறும் நடிகன் அவன்! 

நன்றி: முகநூல் பதிவு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.