![]() |
பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும் |
புத்தர் எந்த உயிர்களுக்கும் சேதம் விளைவித்தல் கூடாது என்று போதனை செய்தவர். அந்தப் போதனையின் அடிப்படையில் உருவான மதம்தான் பௌத்தம். பௌத்த துறவிகள் வைத்துள்ள விசிறி, தாங்கள் பாதையில் எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மாட்டுப்படாமல் இருக்க விசிறப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எந்த மதத்திலும் இந்தளவிற்கு அகிம்மை அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்காது.
ஆனால், நடைமுறையில் இலங்கை போன்ற பௌத்த நாடுகளில் வன்முறைகளுக்கு முதற் காரணம் அகிம்சையான பௌத்த சமயத்தைப் போதிக்கும் பௌத்தத் துறவிகளே! இவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் “பௌத்த தர்மத்தை நாட்டில் பாதுகாக்கிறோம்” என்பதாகும். “பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க, அதர்மம் செய்யலாமா?” என்பதற்கோ “புத்தர் எங்காவது அதர்மம் செய்தாரா அல்லது உடன்பட்டாரா?” என்பதற்கோ முறையான பதில் இல்லை. தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்ட கூற்றுத்தான் இங்கு நினைவிற்கு வருகிறது. அது என்னவென்றால், "சிங்களவர்கள் புத்தரின் பல்லைக் காத்த அளவிற்கு, அவர் சொல்லைக் காத்திருந்தால், இந்தளவிற்கு இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்காது".
குறிப்பு: இலங்கையில் கண்டி எனும் இடத்தில் உள்ள தலதா மாளிகை என்ற பௌத்த வழிபாட்டிடத்தில் புத்தரின் பல் உள்ளதாக நம்பி, அதனை அங்குள்ள சிங்கள பௌத்தர்கள் காத்து, வழிபட்டு வருகின்றனர்.
நன்றி!
பதிலளிநீக்கு