அமைதியான பாடம் புகட்டல்

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே, ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியான முறையில் பாடம் புகட்டினர். சடுதியாக, அடுத்த நாள் தனக்கு அதிகாலையில் விமானப்பயணம் உள்ளதை உணர்ந்த கணவன், தன் மனைவி தன்னை அதிகாலை 5:00 மணிக்கு எழுப்பி உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார்.
அமைதியான பாடம் புகட்டல்
அமைதியான பாடம் புகட்டல்

ஆனாலும் முதலில் அமைதியைக் கலைத்து மனைவியிடம் தோற்காமல் இருக்க, ஒரு காகிதத்தில் “தயவுசெய்து என்னை அதிகாலை 5:00 இற்கு எழுப்பிவிடவும்” என எழுதி மனைவி இலகுவில் கண்டு கொள்ளுமாறு வைத்துவிட்டு நித்திரையாகிவிட்டார்.

அடுத்த நாள் காலை 9 மணிக்கு எழும்பியவர், விமானத்தை தவறவிட்டிருந்தார். கோபத்துடன், மனைவி தன்னை ஏன் எழுப்பிவிடவில்லை என அறியச் சென்றவர், தான் எழுதி வைத்திருந்த காகிதத்தின் அருகில் இன்னுமொரு காகிதத்தைக் கண்டார். அதில் “இப்போது மணி அதிகாலை 5:00 ஆகிவிட்டது. எழும்புங்கள்” என்ற குறிப்பைக் கண்டார்.

ஆண்கள் இவ்வாறான போட்டிகளில் விளையாட முடியாதவர்களாகவே உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.