ஏன் பிராமணியத்தை எதிர்க்க வேண்டும்?

இந்தியாவை ஆண்ட பிரித்தானியர் இந்து மனு தர்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்.  அவை என்னவென்று பார்ப்போம்.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த, இந்து மனுதர்ம சட்டத்தை பிரித்தானியர் ஏற்றுக் கொள்ளாமல்,  சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், 1773 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசு சட்டத்தை எழுதத் தொடங்கியது.

சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்து கொள்ள உரிமை இருந்ததை, 

1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்தை வாங்கி கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டது.

1804 இல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

1813 கொத்தடிமைகள் ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்து மனு சட்டம் VII 374, 375 - பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன் கொல்லப்பட வேண்டும்.  ஆனால், ஒரு பிராமணன் காம இச்சை தீர சூத்திரப் பெண்னைணோடு உறவு கொள்ளலாம். ஆனால் அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால் பிணம் போன்றதேயாகும். (இந்து மனு சட்டம் IX 178)

பிராமணன் தப்பு செய்தால் தண்டனையில்லாமல் இருந்த நிலையில், பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின், அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை 1817 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்டது.

சூத்திர பெண் திருமணம் முடிந்த அன்றே, பிராமணருக்கு பணிகள் பல செய்ய 7 நாள்கள் கோவிலில் இருக்க வேண்டும். அதை பிரித்தானிய அரசாணையின் மூலம் 1819 ஆம் ஆண்டு முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த 

இந்து சட்டத்தை 1835 ஆண்டு பிரபு மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக, சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.

சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டு கொல்ல வேண்டும் என்ற கங்கா தானத்தை 1835 இல் பிரித்தானிய அரசாணையின் மூலம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.

1835 ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்காண அரசாணை கொண்டு வரப்பட்டது.

1868 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் இந்து மனு தர்மச் சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்திரவு பிறப்பித்தது.

சூத்திரர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருந்தால், ஜோதிராவ் புலேவுக்கு கல்வி கிடைத்திருக்காது. இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது. அண்ணலின் தந்தை இராம்ஜி அவர்களுக்கு கல்வியும் இராணுவ பணியும் கிடைத்திருக்காது.

இவையெல்லாம் இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கர் இல்லை, அம்பேத்கர் இல்லை என்றால் நாம் இல்லை.

நன்றி: முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.