இயேசு

திருநெல்வேலியில் நாடார் சமூகத்தவர் அதிகமாக கிறிஸ்தவத்தை ஏற்றதால்,
அங்கு இயேசு நாதர் கிடையாது, இயேசு நாடார் தான்.

மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததால்,
கிறிஸ்துவைக் கோனாராகக் கருதலாம்.

அவர் மீன் உணவை எல்லாருக்கும் கொடுத்ததால்,
மீனவராகவும் கருதலாம்.

தச்சு வேலை செய்ததால்,
ஆசாரி என்று அன்போடும்,
விஸ்வகர்மா என்று வீம்பாகவும் கருதலாம்.

எல்லோருக்கும் நற்செய்தியை அறிவித்ததால்,
பறையராகவும் இருக்கலாம்.

இயேசுவை, ஈசா நபி என்பதால்,
இஸ்லாமியராகவும் இருக்கலாம்.

மனிதனை மண்ணில் இருந்து படைத்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புவதால், குயவராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் சுத்தப்படுத்தியதால்,
அருந்ததியராகவும் இருக்கலாம்.

எல்லோரையும் குணப்படுத்தியதால்,
மருத்துவராகவும் இருக்கலாம்.

கோதுமைக் கதிர்களை அறுத்ததால்,
பள்ளராக இருக்கலாம்.

தேவ மைந்தன் என்று அழைக்கப் படுவதால்,
தேவராகவும் இருக்கலாம்.

குருமார்களை சாட்டையால் அடித்ததால்,
அன்றையப் பெரியாராகவும் இருக்கலாம்.

அப்பத்தையும், மீன்களையும் எல்லோருக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுத்ததால்,
கம்யூனிஸ்டாகவும் இருக்கலாம்.

ஜீசஸ் கிரைஸ்ட் என்பதை, இயேசு நாதர் என்று மொழி பெயர்த்தது யார்?
ஈச நாதன் என்ற சைவத்தொணி தூக்கலாக இருக்கிறது.
அதனால், பிள்ளைமாராகக் கருதலாம்.

பரதவர்கள் முதன்முதலில் கிறிஸ்தவத்தை ஏற்றார்கள்.
நெய்தல் குடிகளை சைவம் உள்வாங்கியதன் வெளிப்பாடாய் தான்,
63 நாயன்மார்களில் முதல் நாயன்மாரான அதிபத்தர்,
பரதவர் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கிறார்.

இந்தியக் கிறிஸ்தவர்களே!
சாதியை விட்டொழியுங்கள்.
அதுவரை உங்களுக்கு இயேசு பிறக்கப் போவதே இல்லை.
உங்களைக் காக்கப் போவதும் இல்லை.

இங்கு கிறிஸ்தவர்கள் யாரும் கிடையாது.
சாதிக் கிறிஸ்தவர்களே உண்டு.
கர்த்தர் ஒருநாளும் உங்களை மன்னிக்கமாட்டார்.
ஆமென்.

படித்ததில் பிடித்தது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.