பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்

இன்று முகநூல் பலருக்குப் போதை, சிலருக்குப் பொழுதுபோக்கு,  வேறுசிலருக்கு வேடிக்கை பார்க்குமிடம். அங்க உண்மையும் பொய்யும் நிறைந்துள்ளது. அங்கிருந்து நல்ல விடயங்களை மட்டும் பொறுக்கி எடுத்தால் நன்மை விளையும். அண்மையில் கீழ் உள்ள படத்தை முகநூலில் பார்க்க முடிந்தது. இந்தப்படம் பௌத்த துறவிகள் புத்தரின் சிலையின் கீழ் இருந்து துப்பாக்கிக்குத் தேவையான வெடிபொருட்களை எடுப்பதுபோல் சித்தரிக்கப்பட்டு உள்ளது. தூரத்தே அழிவைத் தெரிவிக்க அல்லது எரிக்கப்பட்டதின் அறிகுறியாக புகை தெரிகிறது. மேலும், பொதுவாக புத்தர் கண் மூடியிருப்பார். ஆனால் இச்சிலையில் உள்ள புத்தர் பீதியில் கண் பிதுங்கிக் காணப்படுகிறார். அவர் எப்படி அமைதியாகத் தியானம் செய்வது? வந்திருப்பவர்கள் கைகளில் போர் ஆயுதம் வேறு இருக்கிறது என்ற கலக்கமோ?

பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்
பௌத்த துறவிகளும் தற்கால பௌத்தமும்
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று சொல்வதுண்டு. இங்கும் அதுவே உண்மை. இந்தப்படத்தைப் பார்த்தாலே போதும், எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் உள்ளது.

புத்தர் எந்த உயிர்களுக்கும் சேதம் விளைவித்தல் கூடாது என்று போதனை செய்தவர். அந்தப் போதனையின் அடிப்படையில் உருவான மதம்தான் பௌத்தம். பௌத்த துறவிகள் வைத்துள்ள விசிறி, தாங்கள் பாதையில் எறும்பு போன்ற சிறு உயிரினங்கள் மாட்டுப்படாமல் இருக்க விசிறப் பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எந்த மதத்திலும் இந்தளவிற்கு அகிம்மை அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்காது.

ஆனால், நடைமுறையில் இலங்கை போன்ற பௌத்த நாடுகளில் வன்முறைகளுக்கு முதற் காரணம் அகிம்சையான பௌத்த சமயத்தைப் போதிக்கும் பௌத்தத் துறவிகளே! இவர்கள் அதற்குச் சொல்லும் காரணம் “பௌத்த தர்மத்தை நாட்டில் பாதுகாக்கிறோம்” என்பதாகும். “பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க, அதர்மம் செய்யலாமா?” என்பதற்கோ “புத்தர் எங்காவது அதர்மம் செய்தாரா அல்லது உடன்பட்டாரா?” என்பதற்கோ முறையான பதில் இல்லை. தமிழ்நாட்டின் அரசியல்வாதி ஒருவர் குறிப்பிட்ட கூற்றுத்தான் இங்கு நினைவிற்கு வருகிறது. அது என்னவென்றால், "சிங்களவர்கள் புத்தரின் பல்லைக் காத்த அளவிற்கு, அவர் சொல்லைக் காத்திருந்தால், இந்தளவிற்கு இலங்கையில் இரத்த ஆறு ஓடியிருக்காது".

குறிப்பு: இலங்கையில் கண்டி எனும் இடத்தில் உள்ள தலதா மாளிகை என்ற பௌத்த வழிபாட்டிடத்தில் புத்தரின் பல் உள்ளதாக நம்பி, அதனை அங்குள்ள சிங்கள பௌத்தர்கள் காத்து, வழிபட்டு வருகின்றனர்.

இஸ்லாமுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த முதல் ஐந்து பேர்

இஸ்லாம் மதம் பற்றிய மற்றவர்களுக்கு மோசமான கருத்தினை ஏற்பத்தியவர்களில் முதல் ஐந்து பேர் பின்வருமாறு. இறங்கு வரிசைப்படி இவர்களின் பெயர் தரப்பட்டுள்ளது.
இஸ்லாமுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுத்த முதல் ஐந்து பேர்

ஒசாமா பின்லாடன் (Osama Bin Laden) 
அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள், இராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 9/11 தாக்குதல்கள் என்றழைக்கப்பட்ட தாக்குதலின் பிரதான காரண கர்த்தா ஒசாமா பின்லாடன் ஆவார். இதைத்தவிர பல தாக்குதல்களுக்கும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் காரணமான இவரைக் கைதுசெய்ய பல நாடுகள் முயன்றன. இறுதியில், 1 மே 2011 அன்று அமெரிக்க சிறப்பு படைப்பிரிவான சீல் “நெப்டியூன் ஈட்டி நடவடிக்கை” என்று பொருள் தரும் நடவடிக்கை மூலம் கொல்லப்பட்டார். 40 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தை எடுத்துக் கொண்ட இந்நடவடிக்கை பாக்கிஸ்தானில் ஒசாமாவின் ஒரு மறைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டது. இவரது மரணம் மரபியல் அடையாளப்படுத்தல் மூலம் உறுதிசெய்யப்பட்டது. 6 நாட்கள் கழித்து அவரின் மரணத்தை அல்கைதா இயக்கம் உறுதி செய்தது.

சதாம் குசைன் (Saddam Hussein)
பாத் கட்சி மூலம் துணை அதிபராக 1968 இல் தெரிவான சதாம் குசைன், அதிபர் பதவி விலகியதும் 1979 இல் ஈராக்கின் அதிபரானார். 1980 முதல் 1988 வரையான காலப்பகுதியில் ஈரான் மீது போர் தொடுத்தார். அது வெற்றி தோல்லியின் முடிவடைந்தது. மேலும், 1980 களில் இவர் இரசாயண ஆயுதத் தாக்குதலை ஈராக்கிலிருந்த குர்திஸ் மக்கள் மீது மேற்கொண்டார். இதனால் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். 1990 இல் குவைத் மீது படையெடுத்தார். ஆயினும் அமெரிக்கா வளைகுடாப் போர் மூலம் குவைத்தைக் காப்பாற்றியது. 2003 இல் அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்தது. இதனால் சதாம் தலைநகர் பக்தாத்தைவிட்டு பின்வாங்கினார். ஆயினும், டிசம்பர் 2003 இல் சதாமின் மறைவிடத்தைக் அமெரிக்கா கண்டுபிடித்தது. வழக்கு விசாரணையின் முடிவில், அவரை குற்றவாளியாகத் தீர்ப்பளித்த நீதிமன்றம் மரண தண்டனைக்குத் தீர்ப்பளித்து. 2006 டிசம்பரில் அவர் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

ஹஜ் அமின் அல் குசேனி (Haj Amin al-Husseini)
மொஹமட் அமின் அல் குசேனி ஒரு பலஸ்தீனிய அரபு தேசியவாதியும் பலஸ்தீனிய பிரித்தானிய நிர்வாகத்தில் முஸ்லிம் தலைவராகவும் இருந்தார். பலஸ்தீனத்தில் யூதர்களுக்காக தேசிய தாயகம் அமைப்பதை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டார். யூத இன எதிர்ப்பாளரான இவர் தன்னைப் பின்பற்றுவபர்களிடம் “கண்ணில் தென்படும் யூதர்களை கொல்லுங்கள்” எனக் கூறியனார். இரண்டாம் உலகப் போரின்போது நாசிக்கு ஒத்துழைப்பு வழங்கிய இவர், 1941 இல் நாசி சர்வாதிகாரி ஹிட்லரைச் சந்தித்தார். ஹிட்லரிடம் அரபுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தரும்படியும், யூதர்களுக்காக தேசிய தாயகம் அமைப்பதை எதிர்க்கும்படியும் கேட்டார். முஸ்லிம்களை அவர் நாசிப் படையின் சிறப்புப் படைப்பிரிவான வாஃபன் எஸ்எஸ் என்பதில் இணைத்தார். இப்படைப்பிரிவே பல கொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் காரணமாயிருந்தது. 1948 இஸ்ரேல் சுதந்திரப் போரின் பின் இவரது தலைமை குறையத் தொடங்கி, அரசியல் செல்வாக்கையும் இழந்தார். 1974 லெபனானின் பெய்ரூட்டில் மரணமடைந்தார்.

இடி அமின் (Idi Amin)
இடி அமின் டாடா ஔமி (இடியாமின்) 1971 முதல் 1979 வரை உகண்டாவை இராணுவ அதிகாரியாக ஆட்சி செய்த ஓர் சர்வதிகாரி. உகண்டாவில் காணப்பட்ட இன முரண்பாட்டைப் பயன்படுத்தி அக்கோலி, லங்கோ மற்றும் ஏனைய இனக் குழுக்களை துன்புறுத்த கட்டளையிட்டார். இவர் ஆட்சிக்காலத்தில் 100,000 முதல் 300,000 எண்ணிக்கையிலான மக்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். 1972 இல் ஆசிய நாட்டவர்களை உகண்டாவைவிட்டு வெளியேற்றினார். இறைவனின் வழிகாட்டலின்படியே இதனைச் செய்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார். பல வருடமாக உகண்டா மக்கள் பலர் காணமல் போயினர். அவர்களின் சிதைக்கப்பட்ட உடல்கள் விக்டோரியா ஆற்றஙங்கரையில் ஒதுங்கின. அமின் நரமாமிசம் உண்ணும் ஒருவராக செயற்பட்டார். ஒருமுறை அவர் மனித இறைச்சி அதிக உப்புமிக்கது எனக் குறிப்பிட்டார்.

ருகொல்லாஹ் கொமேனி (Ruhollah Khomeini)
அயத்துல்லாஹ் கொமேனி 1979 முதல் 1989 வரை ஈரானின் சமயத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் இவர் சாரியா சட்டத்தை (இஸ்லாமிய சமயச் சட்டம்) ஈரானிய படையினரைக் கொண்டும் இஸ்லாமிய குழுக்களைக் கொண்டும் நடைமுறைப்படுத்தினார். சமய கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள் மிகவும் மேசமாக தண்டிக்கப்பட்டனர். அரசியல் கைதிகள் அணைவரையும் கொல்லும்படி உத்தரவிட்டார். ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் துரிதமாகக் கொல்லப்பட்டனர். கிட்டத்தட்ட 30,000 அரசியல் செயற்பாட்டாளர்கள் கொலை செய்யப்பட்டனர். உள்ளக இரத்தப் பெருக்கைக் கட்டுப்படுத்த 11 நாட்களாக நடந்த சத்திரசிகிச்சை பலனின்றி, இவர் 86 வயதில் புற்றுநோயால் இறந்தார்.

திருமண நகைச்சுவை

மின்னஞ்சல் ஒன்றின் மூலம் பெறப்பட்ட ஆங்கில நகைச்சுவையின் தமிழாக்கம். யாரையும் குறைவாக மதிப்பிடவில்லை. நகைச்சுவையாயினும் ஆங்காங்கே உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

திருமண நகைச்சுவை
திருமண நகைச்சுவை

ஆண்: நீண்ட நாள் வாழ ஏதாவது வழி இருக்கிறதா?
வைத்தியர்: திருமணம் செய்.
ஆண்: இது உதவி செய்யுமா?
வைத்தியர்: இல்லை, ஆனால் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற எண்ணம் வராது.

ஆண்: திருமணத்தின்போது ஏன் மணமக்கள் கை குலுக்கிக் கொள்கிறார்கள்?
பாதிரியார்: குத்துச் சண்டை தொடங்கு முன் போட்டியாளர்கள் கைகளை குலுக்கிக் கொள்வதற்கு ஒப்பானது.

மின்னியல் இணைய வங்கியவிட பணத்தை மிகவும் வேகமாக பரிமாற்றும் முறைக்குப் பெயர் திருமணம்.

மனைவி: அன்பே, இன்று நமது திருமணநாள். என்ன செய்யலாம்?
கணவன்: இரண்டு நிமிடம் மௌனமாக எழுந்து நிற்போம்.

நீங்கள் திருமணமானவர் என்றால் தயவுசெய்து பின்வரும் செய்தியைப் பார்க்க வேண்டாம்.
சுதந்திர தின வாழ்த்துக்கள்!

திருமணமத்திற்கு முன்: நீ சொல்லியதை எண்ணி ஆண் ஒவ்வொரு இரவில் விழித்தெழுவான்.
திருமணமத்திற்கு பின்: நீ சொல்லி முடிப்பதற்கு முன் ஆண் நித்திரையாகிவிடுவான்.

பெண் நண்பிகள் சாக்கலேட் போன்றவர்கள். எப்போதும் இனிப்பாக இருப்பார்கள்.
காதலிகள் பீட்சா போன்றவர்கள். உறைப்பும் நறுமணமும் போல் அடிக்கடி உண்ணப்படுவது.
மனைவிகள் சோறும் பருப்பும் போன்றவர்கள். தெரிவே இல்லை என்றபோது உண்ணப்படுபவர்கள்.

கணவனாகப் போகிறவர்: “ஆண், பெண்ணின் எசமானன்” என்ற புத்தகம் உங்களிடம் உள்ளதா?
கடையிலுள்ள பெண்: ஐயா, கற்பனைக் கதைப் பகுதி அந்தப்பக்கம் உள்ளது.

கடவுளை அறிந்து கொள்வது குழப்பமானது. பெண்ணை மிகவும் ஒரு அழகிய விடயமாக உருவாக்கி, பின்பு மனைவியாக மாற்றிவிட்டார்.

திருமணம் செய்யு முன்: நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். அதற்காக நரகத்திற்கு வேண்டுமானாலும் போகலாம்.
திருமணம் செய்த பின்: நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கிறிஸ்தவ தேவாலயத்தை கள்வர் குகையாக்கும் கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவ வேதாகமத்தில் பின்வரும் பகுதிகளைக் காணலாம். இப்பகுதி லூக்கா 19:46-46 வசனங்களில் வாசிக்கலாம்.

நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்
நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்

இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், 'என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்' என்று கூறினார்.

இயேசு ஒரு யூதர். அவர் யூதர்களின் கோயிலுக்குச் சென்றபோது பலர் கோயிலில் வியாபாரத்தையே முதன்மைப்படுத்தி, ஆலயத்திற்கு உரிய மரியாதையைக் கொடுக்கவில்லை. அதனால் சினம் கொண்ட இயேசு அவர்களை வெளியே துரத்தத் தொடங்கினார்.

முகநூலில் இயேசு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவரான பாப்பரசரை வெளியே துரத்தவது போன்ற ஓர் படத்தைக் காண நேர்ந்தது. ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்று சொல்வதுண்டு. இங்கும் இப்படம் ஆயிரம் சொற்களின் விளக்கத்தைத் தருகிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை புண்படுத்தும் நோக்கில் இங்கு பகிரவில்லை. உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். அனைத்து மதங்களும் தத்தமது நிலை இழந்து நிற்பதை பகுத்தறிவு நிறைவுள்ள எந்த மனிதனும் அறிவான்.